‘’பேட்மின்டன் வீராங்கனை சிந்துவை கல்யாணம் பண்ணி வையுங்கப்பா’’: கலெக்டரிடம் மனு கொடுத்து அடம் பிடித்த முதியவர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘’பேட்மின்டன் வீராங்கனை சிந்துவை கல்யாணம் பண்ணி வையுங்கப்பா’’: கலெக்டரிடம் மனு கொடுத்து அடம் பிடித்த முதியவர்

ராமநாதபுரம்: பேட்மின்டன் வீராங்கனை சிந்துவை திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று முதியவர் ஒருவர் கலெக்டரிடம் மனு கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி. வி. சிந்து (24).

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர். உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சமீபத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

இதன் பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இதில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே விரதக்குளம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான மலைச்சாமியும் இணைந்துள்ளார்.

அத்துடன் இந்த முதியவர் ஒருபடி மேலே போய் சிந்துவை அவரை காதலிப்பதாகவும் அவரை மணம் முடிக்க விரும்புவதாகவும் கூறி ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் மனு கொடுத்து திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

முதியவர் கொடுத்த மனு விவரம்; விளையாட்டுத்துறையில் எனக்கு தீராத ஆர்வம். பேட்மின்டன் வீராங்கனை பி. வி. சிந்துவை காதலித்து வருகிறேன்.

அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். எப்படியும், எங்கிருந்தாலும் சிந்துவை மணம் முடித்தே தீருவேன்.

அவரை விடப்போவதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் மனுவுடன் பி. வி. சிந்துவின் புகைப்படத்தையும் இணைத்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரை அதிகாரிகள் அழைத்து எச்சரித்து அனுப்பினர்.

முதியவர் அடிக்கடி இது போன்ற சர்ச்சைக்குரிய மனுக்களை கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை