வழிப்பறி வாலிபரை காதலித்த பள்ளி மாணவி
அண்ணாநகர்: சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் வில்(எ) வசந்த்(22). இவர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி, கஞ்சா போன்ற வழக்குகள் கோயம்பேடு, மதுரவாயல், திருமங்கலம், உள்ளிட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் பள்ளி மாணவியை காதலித்து வந்து உள்ளார்.
இதுகுறித்து, மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. மாணவியை தந்தை கண்டித்தார்.
ஆனாலும் மாணவி தொடர்ந்து அந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவியின் தந்தை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து பெண் ஆய்வாளர் சிமினா பானு இருவரையும் அழைத்து தனி தனியே விசாரணை செய்தார்.
முதலில் பள்ளி மாணவியை அழைத்து அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
மாணவியை தொந்தரவு செய்தால் சிறைக்கு அனுப்பி விடுவேன் என்று வாலிபரை எச்சரித்து அனுப்பினார்.