ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது கார் மோதி கணவன், மனைவி பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி மீது கார் மோதி கணவன், மனைவி பலி

ஸ்ரீபெரும்புதூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பஸ்தி பகுதியை சேர்ந்தவர் குட்வின் ராஜ்குமார் (52). இவரது மனைவி ஷோபன செல்வகுமாரி (47).

இவர்களது மகன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக நேற்று மாலை ஓசூரில் இருந்து இருவரும் சென்னைக்கு காரில் கிளம்பினர்.

காரை குட்வின் ராஜ்குமார் ஓட்டி வந்தார். இந்நிலையில், இவர்கள் நேற்றிரவு ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைபாக்கம் சிப்காட் சாலை வழியே சென்றபோது, குட்வின் ராஜ்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.

அங்கு சாலையோரம் நின்றிருந்த லாரிமீது கார் வேகமாக மோதியது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இவ்விபத்தில் குட்வின் ராஜ்குமார், அவரது மனைவி ஷோபன செல்வகுமாரி ஆகிய இருவரும் காரின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், இருவரின் சடலத்தை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை