திருவொற்றியூரில் வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவொற்றியூரில் வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில், தனது சொந்த ஊருக்கு செல்ல கணவர் மறுத்ததால் வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவொற்றியூர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஜஸ்வந்த் (30). தச்சுவேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி ரேகா (25). இருவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஊரிலிருந்த ரேகாவை சென்னைக்கு அழைத்து வந்தார். பின்னர் திருவொற்றியூரில் வாடகை வீடு பிடித்து, இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

இதற்கிடையே சென்னையில் இருக்க ரேகாவுக்கு விருப்பமில்லை. இதனால் சொந்த ஊருக்கு சென்றுவிடலாம் என கணவரை வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இதற்கு ஜஸ்வந்த் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரேகா, நேற்றிரவு வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கணவர் ஜஸ்வந்த்தும் சாத்தாங்காடு போலீசாரும் விரைந்து வந்தனர். பின்னர் ரேகாவின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேகாவின் மரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை