ப.சிதம்பரம் கைது,..அரசியல் தலைவர்கள் கண்டனம்
சென்னை: நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை ப.சிதம்பரம் கைது காட்டுகிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். எந்த சட்ட வரையறைக்கும் உட்பட்டு ப.சிதம்பரம் கைது செய்யப்படவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். ப.சிதம்பரம் வெளிநாடோ அல்லது வேறு எங்கேயோ சென்று தலைமறைவாகி விடமாட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்தோடு ப.சிதம்பரம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.