கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகள் முந்தைய இரும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு!
கீழடியில் நடந்துவரும் 5 -ஆம் கட்ட அகழாய்வில், இரும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக தோண்டப்பட்ட குழிகளில் இதுவரை ஏராளமான பழங்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன.
தற்போது இரும்புத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த இரும்புத் துண்டுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டவை எனத் தெரிய வந்துள்ளது.