சென்னை அமைந்தகரையில் மருத்துவர் குழந்தை கடத்தப்பட்டதாக புகார்: போலீசார் விசாரணை
சென்னை: சென்னை அமைந்தகரையில் மருத்துவர் அருள்ராஜின் இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வீட்டில் வேலை செய்யும் பெண் கடத்திச் சென்றதாக அமைந்தக்கரை காவல் நிலையத்தில் மருத்துவர் புகார் அளித்துள்ளார். தனியார் பள்ளியில் படித்துவந்த இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.