போலீசாருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

தினமலர்  தினமலர்
போலீசாருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

சூளைமேடு : நோய் தொற்றிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு, சிவப்பு கம்பளம் விரித்து, சக காவலர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சென்னையில், கொரோனா பரவலை தடுப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியிலும் காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிகளில் ஈடுபடும் போலீஸ் உயர் அதிகாரி மட்டுமின்றி, காவலர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பின் அவர்கள் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பும் போது, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, சமீபத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து திரும்பிய, அண்ணாநகர் துணை கமிஷனரை, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அதேபோல், நேற்று சூளைமேடு காவல் நிலையத்தில், கொரோவிலிருந்து மீண்டு வந்த, உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து, மலர் துாவி காவலர்கள் வரவேற்றனர். இதில் பொது மக்களும் பங்கேற்றனர்.மேலும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தர்மராஜன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, சூளைமேடு ஆய்வாளர் ஆனந்த்பாபு ஆகியோர், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மூலக்கதை