கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஊரக வேலை உறுதித் திட்டப் பணியை 150 நாட்களாக உயர்த்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் கூறினார்.