கர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

தினகரன்  தினகரன்
கர்நாடக அரசு மூடியுள்ள சாலையை திறக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

கேரளா: கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவில் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன, அதில் கர்நாடக அரசு மூடியுள்ள சாலையை  திறக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவுக்கு சரக்கு கொண்டுவர முக்கிய பாதையாக திகழ்கிற தலச்சேரி-கூர்க் சாலையை திறக்க கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி உள்ளார்.

மூலக்கதை