கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் கட்டாயம் ஒதுக்க வேண்டும்: முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் மருத்துவமனைகளுக்கு உத்தரவு
சென்னை: கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க 25% படுக்கைகள் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அறைகள், அனைத்து நவீன வசதிகள் அடங்கியதாக இருக்க வேண்டும். உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சட்டரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.