கார் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது
திருவள்ளூர் : கார் தொழிற்சாலை அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருவள்ளூர் அருகே அதிகத்தூரில் முத்தரசன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏற்கனவே பணி வழங்கப்பட்டவர்களை புதிய நிர்வாகம் பணிநீக்கம் செய்ததால் தொழிலாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை, பிரான்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதால் பழைய தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.