சிஏஏவுக்கு எதிராக பேரணி திருமாவளவன் உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் நேற்றுமுன்தினம் இரவு அனைத்து ஜமாத்தினர் மற்றும் இஸ்லாமியர்கள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஜோதிமணி எம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.இந்நிலையில் விஏஓ கோபாலகிருஷ்ணன் நேற்று அளித்த புகாரின்பேரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பேரணி மற்றும் கூட்டம் நடத்தியதாக புத்தாநத்தம் போலீசார் திருமாவளவன், ஜோதிமணி, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் உள்பட 3,000 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.