மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு 2020-2021ம் ஆண்டில் ரூ. 2,812 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. 2009 முதல் 2014ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு சாரசரி நிதி ஒதுக்கீட்டை விட இது 220 சதவீதம் அதிகம்  ஆகும்.



தற்போது ரூ. 1,600 கோடி மதிப்பீட்டில் காட்பாடி - விழுப்பும் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ. 1,600 கோடி மதிப்பீட்டில் சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டை  வழிப்பாதை திட்டம், ரூ. 650 மதிப்பீட்டில் ஈரோடு - கரூர் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ. 2900 கோடி மதிப்பீட்டில் தருமவரம் - காட்பாடி இரட்டை வழிப்பாதை  திட்டம், ரூ. 1470 கோடி மதிப்பீட்டில் ஓசூர் - ஓமலூர் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ.

278 கோடி மதிப்பீட்டில் சென்னை கடற்கரை - எழும்பூர் இரட்டை  வழிப்பாதை திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை