பொன்னேரியில் மாணவி மாயம்: கடத்தலா? போலீசார் விசாரணை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொன்னேரியில் மாணவி மாயம்: கடத்தலா? போலீசார் விசாரணை

பொன்னேரி: பொன்னேரியில் மாயமான பள்ளி மாணவியை யாராவது கடத்தினார்களா என போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்காதர்.

இவரது மகள் பானு (16).   இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால்,  பொன்னேரியில் உள்ள உறவினர் முகமது ஆசிப் (36) என்பவரின் வீட்டில் பானு தங்கி சிகிச்சை பெற்றுவந்ததாக  தெரிகிறது.

கடந்த 1ம் தேதி பானு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.   அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பொன்னேரி போலீசில் பானுவின் தந்தை  அப்துல்காதர் புகார் அளித்தார்.

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவியை யாராவது கடத்தினார்களா, வேறு ஏதேனும் காரணமா  என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை