நாகை அருகே உள்ள நிவாரண முகாமில் மக்களை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை... கிராமமக்கள் குற்றச்சாட்டு
நாகை : பூவைத்தேடி நிவாரண முகாமில் உள்ள மக்கள், அரசு அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என்று கிராமமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் நகர பகுதிகளில் மட்டுமே அரசு அதிகாரிகள் கவனம் செலுத்துவதாகவும், கிராம பகுதிகளை கண்டுகொள்ளவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.