ராஜபக்சே தரப்பினர் தகராறு : இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்தார் சபாநாயகர்
கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே தரப்பு எம்பிக்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மீது ராஜபக்சே தரப்பினர் தாக்குதல் நடத்திவிட்டு சபாநாயகரின் இருக்கையை ராஜபக்சே தரப்பினர் தூக்கி சென்று விட்டனர். இதையடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்துள்ளார்.