கஜா புயலால் தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் : முதல்வர் பழனிசாமி
சென்னை : கஜா புயலால் தமிழகத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 83,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், சேதம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கஜா புயலால் நாகையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மின் விநியோகம் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.