அம்பத்தூர் தொழிற்பேட்டையில் லாரி மோதி பைக் வாலிபர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் லாரி மோதி பைக் வாலிபர் பலி

ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நின்றிருந்த ஒரு காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால், பைக்கில் வந்த வாலிபர் மோதி கீேழ விழுந்தார். அவர்மீது லாரி ஏறி இறங்கியதில் பரிதாபமாக பலியானார்.

இதுதொடர்பாக 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை வில்லிவாக்கம், நேதாஜி நகர், ரத்தினம் அவென்யூவை சேர்ந்தவர் மதியுல்லா (22).

இவர், அம்பத்தூரில் ஒரு தனியார் செல்போன் நிறுவன சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே சிடிஎச் சாலையில் மதியுல்லா பைக்கில் வந்தபோது, அங்கு சாலையோரம் நின்றிருந்த ஒரு காரின் கதவை டிரைவர் திறந்தார்.

திடீரென திறக்கப்பட்ட கார் கதவின்மீது எதிர்பாராத விதமாக மதியுல்லா ஓட்டிவந்த பைக் ேமாதியது. இதில் அவர் பைக்குடன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த லாரி அவர்மீது வேகமாக ஏறி இறங்கியது. இதில் மதியுல்லா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர்.

அங்கு மதியுல்லாவின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கொளத்தூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவர் நவநீதகிருஷ்ணன் (61), வேலூர், மதிநகர், புது தெருவை சேர்ந்த லாரி டிரைவர் முருகன் (57) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை