சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை அவசரமாக விசாரிப்பது குறித்து நாளை அறிவிப்பு
டெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிரான அனைத்து சீராய்வு மனுக்களையும் அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கறிஞர் மாத்யூ நெடும்பரா என்பவர் முறையிட்டார். இந்த முறையீடு குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், அவசரமாக விசாரணைக்கு எடுப்பது தொடர்பாக நாளை அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.