வேளச்சேரியில் வளர்ப்பு நாயை கொன்றவர் கைது
வேளச்சேரி: சென்னை வேளச்சேரியில் வளர்ப்பு நாயை கொன்ற ஜெகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி செல்வியுடன் ஏற்பட்ட தகராறில் வளர்ப்பு நாயை அடித்து கொன்றதாக புகார் அளித்துள்ளார். மனைவி செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் ஜெகந்நாதனை போலீசார் கைது செய்தனர். தான் செல்லமாக வளர்த்து வந்த நாயை கணவர் அடித்துக் கொன்றதாக செல்வி புகார் அளித்துள்ளார்.