எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு
சென்னை: எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். போலீசார் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கருணாஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.