தமிழகத்தில் விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
கரூர்: தமிழகத்தில் பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். லண்டனில் பேட்டரி பேருந்துகளை பார்வையிட்டு திரும்பிய எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் பேட்டியளித்துள்ளார். முதல் கட்டமாக சென்னையில் 80, கோவையில் 20 பேட்டரி பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.