சென்னையில் திமுக எம்.பி தயாநிதிமாறன் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கல்
சென்னை: மத்திய சென்னை தொகுதி திமுக எம்.பி தயாநிதிமாறன் வால்டாக்ஸ் சாலையில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று ஒரு நாளில் ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு விரிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.