பொள்ளாச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுகோட்டையில் 2000 கல்லூரி மாணவிகள் சாலைமறியல்
புதுக்கோட்டை:பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கலைக்க முயன்றதால் கல்லூரி மாணவிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.