தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதலவர் நேரில் அஞ்சலி
தூத்துக்குடி: சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினார். தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊரான சவாலாப்பேரி வந்தது. சுப்பிரமணியன் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.