ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தகவல்
சென்னை : ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் ரூ. 16.75 கோடி வரி பாக்கிக்காக 2007ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு இல்லம் ஆக்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.