ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் பொதுக்காப்பீடு... பரிசீலிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவு
மதுரை: 2020 முதல் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் பொதுக்காப்பீடு செய்வது பற்றி அரசு பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் தொடுத்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை இந்த உத்தரவை வழங்கியுள்ளது.