வீர மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது
சென்னை: கொள்ளையர்களை பிடிக்கும் போது வீர மரணம் அடைந்த காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும் டிஜிபி, மற்றும் காவல் ஆணையர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.