டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜந்தர்மந்தரில் போராட தடை விதித்திருந்தது. தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன் அமர்வு தடையை நீக்கி உத்தரவிட்டனர்.