நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு தடைவிதித்தது உயர்நீதிமன்ற கிளை
மதுரை: ஏப்ரல் 26ம் தேதி நடக்க இருந்த நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியை நீக்கிய பிறகே தேர்தல் நடத்த வேண்டும் என்று நெல்லைச் சேர்ந்த ஜிம் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.