மாநில உரிமைகள் அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது: – வைகோ

என் தமிழ்  என் தமிழ்
மாநில உரிமைகள் அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது: – வைகோ

வேளாண்மைத்துறையை மத்திய அரசின் பொறுப்புக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு உடனே எதிர்ப்பு தெரிவிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை, உணவுப்பதப்படுத்தும் துறையை மத்திய அதிகாரப்பட்டியலுக்கு மாற்றக் கூடாது என்று கூறினார்.

மேலும் மாநில உரிமைகள், அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டை தகர்க்க 3 ஆண்டுகளாக மோடி அரசு செயல்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அரசியலமைப்பு சட்டத்தையே புறந்தள்ளி வருகிறதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை