ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது : திருநாவுக்கரசர்
சென்னை: ராகுல் காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அந்த தகவல் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். ப.சிதம்பரத்துடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.