பி.ஜே.பி பாசிச அரசின் தத்துவம் வேறு தமிழர்களின் தத்துவம் வேறு: – திருமுருகன் காந்தி
ஃபாசிசத்துக்குக்கு எதிராகப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular front of India) சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உரிமை முழக்க மாநாடு நடைபெற்றது. இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசியப் பொதுச் செயலாளர் முகம்மது அலி ஜின்னா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முஹம்மது அலி ஜின்னா, ”சமீபகாலமாகப் பி.ஜே.பி என்ற பாசிச ஆட்சி என்.ஏ.ஐ அறிக்கை கொடுத்தாகச் சொல்லி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்யத் துடிக்கிறது. அதற்குக் காரணம், அந்த அமைப்பு, இந்தியாவில் எந்தப் பிரச்னை வந்தாலும் முன்னின்று போராடி வருகிறது. அதனால், இந்த அமைப்பைத் தடை செய்யத் தீவிர வேலைகளை பி.ஜே.பி அரசு செய்துவருகிறது. இதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது” என்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசியபோதும் இதே கருத்தை முஹம்மது அலி ஜின்னா முன்வைத்தார். இதில் கலந்துகொண்டு பேசிய தொல்.திருமாவளவன், ”முஸ்லிம் வெறுப்பு என்பது மதவெறி யுக்தி. தலித் வெறுப்பு என்பது சாதிவெறி யுக்தி” என்றார். வேல்முருகன் பேசும்போது, ”இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு செயல்படுகிறது. இவற்றை அழிக்க பி.ஜே.பி. முயற்சி செய்துவருகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் இருக்கும்வரை இதை அழிக்க முடியாது” என்றார். திருமுருகன் காந்தி பேசும்போது, ”பி.ஜே.பி ஃபாசிச அரசின் தத்துவம் வேறு. தமிழர்களின் தத்துவம் வேறு. உங்களுடைய தத்துவம் வன்முறையைப் போதிக்கக் கூடியது. எங்கள் தத்துவம் அன்பையும் அமைதியையும் போதிக்கக் கூடியது” என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
