இளையோர் மத்தியில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம்: – பிரதமர் மோடி வேதனை
இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வரும் குடிப்பழக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் வேதனை தெரிவித்துள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் சமூக-மத அமைப்பான ‘உமையா சனஸ்தான்’ சார்பில் ‘மா உமையா தம்’ என்ற ஆசிரமம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆசிரமத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர், பல்வேறு சமூக பிரச்சினைகளை எதிர்த்து போராடி வரும் உமையா சனஸ்தான் அமைப்பினர், மதுவுக்கு எதிராகவும் போராடுமாறு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒரு பிரதமராக அல்ல, உங்கள் மத்தியில் வளர்ந்தவன் என்ற முறையில் இந்த கவலையை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். நமது மூதாதையர்கள் வெறுத்த குடிப்பழக்கத்துக்கு இன்றைய இளைய தலைமுறையினர் குறிப்பாக நமது இளைஞர்கள் அடிமையாகி இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த போக்கை நாம் வளரவிட்டால், 20 அல்லது 25 ஆண்டுகளில் நமது சமூகம் அழிந்து விடும்.
நமது இளைய தலைமுறையினர் இத்தகைய தவறான வழியில் செல்வதை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் பல்வேறு சமூக பிரச்சினைகளில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பை போல இதிலும் உங்களால் முக்கிய பங்காற்ற முடியும்.
இந்த ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களிடம், ‘உங்கள் வீட்டில் கழிவறை உண்டா? இல்லையா?’ என கேட்கப்பட வேண்டும். அத்துடன் அவர்களுக்கு மரக்கன்று ஒன்றையும் வழங்க வேண்டும். இதன் மூலம் மா உமையா மீதான பக்தி வளர்வது போல, அந்த மரமும் வளரும். இது, திறந்த வெளியில் மலம் கழித்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுற்றுச்சூழலை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க உதவும்.
‘உமையா சனஸ்தான்’ மூலம் திறக்கப்பட்ட தர்மசாலாக்கள், ஒட்டுமொத்த வட இந்தியாவிலும் சுற்றுலாவை மேம்படுத்தி வருகின்றன. குறிப்பாக உத்தரகாண்டில் ஹரித்வார், ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி போன்ற தலங்களுக்கான புனித யாத்திரைகள் நடைபெறுகின்றன. ஹரித்வாரில் மிகப்பெரிய தர்மசாலா உருவாக்கியதற்காக சனஸ்தான் அமைப்பை வாழ்த்துகிறேன்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
