சென்னையில் சீமானை சந்தித்த இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இன்று இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா சென்னையில் சந்தித்தார்.இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா, தனது காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோ-வை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஜூலை 12-ம் தேதி கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இவர்களது மனு, சார்பதிவாளர் அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டது.
இந்தியத் திருமணச் சட்டப்படி, ‘மனுதாரரின் திருமணத்தில் ஆட்சேபனை இருப்பவர்கள் 30 நாள்களுக்குள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம்’ என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இரோம் சர்மிளா மனு செய்த அடுத்த நாளே, கொடைக்கானல் பேத்துப்பாறையைச் சேர்ந்த தே.மு.தி.க பிரமுகரான மகேந்திரன், இவர்களின் திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மனு ஒன்றை அளித்தார்.
இதைத் தொடர்ந்து, இரோம் சர்மிளா – தேஸ்மந்த் கொட்டின்கோ திருமணம் இங்கே நடைபெற்றால், கொடைக்கானல் போர்க்களமாகிவிடும். அதன்மூலம், கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது எனத் தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி அவர்களின் திருமணம் கொடைக்கானலில் நடந்தது. இந்நிலையில், இரோம் சர்மிளா தனது கணவருடன் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்துப் பேசியுள்ளார்.
கொடைக்கானலில் முகாமிட்டிருந்த இரோம் சர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்த பல அமைப்புகளில் நாம் தமிழர் கட்சியும் ஒன்று. எனவே, அதற்கு மரியாதை கொடுக்கும் வகையில்தான் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், சந்திப்பின்போது நடப்பு அரசியல் குறித்து சீமானும் சர்மிளாவும் விரிவாக உரையாடியதாக நாம் தமிழர் கட்சியின் நெருக்கிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
