கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா தினகரன் கும்பலை அகற்றவேண்டும் - ஓபிஎஸ் அணி மதுசூதனன் பிரசாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா தினகரன் கும்பலை அகற்றவேண்டும்  ஓபிஎஸ் அணி மதுசூதனன் பிரசாரம்

திருவொற்றியூர்- சென்னை ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பாக மதுசூதனன், இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்  தனது ஆதரவு நிர்வாகிகளையும் மகளிரணியினரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

பல்வேறு சமூகநல அமைப்பு மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று சிவன் நகர், ஜீவா நகர், மங்கம்மா தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மதுசூதனன் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது மதுசூதனன் பேசியதாவது: ஜெயலலிதாவின் ஆன்மாதான் ஓபிஎஸ்ஸை வழிநடத்துகிறது.

ஜெயலலிதா சாவில் உள்ள மர்மத்தை விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.

கட்சி, ஆட்சியில் இருந்து சசிகலா, தினகரன் கும்பலை அகற்ற வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கலாம் என்ற எண்ணத்தில் தினகரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால், அவரை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எங்களிடம் பாசம் மட்டுமே உள்ளது. அதனால் எங்களுக்கே மக்கள் ஆதரவு தருகின்றனர்.

இத்தொகுதி மக்களின் ேதவைகளையும், ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளையும் நான் தொடருவேன். எனக்கு இரட்டை மின்விளக்கு கம்பம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு மதுசூதனன் கூறினார்.


.

மூலக்கதை