வீடியோ கான்பரன்ஸ் மூலம் மந்திரவாதி காவல் நீட்டிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீடியோ கான்பரன்ஸ் மூலம் மந்திரவாதி காவல் நீட்டிப்பு

பெரம்பலூர்- பெரம்பலூர் எம். எம். நகரில் உள்ள மாடி குடியிருப்பில் இளம்பெண் சடலம், மண்டை ஓடுகளை வைத்து மாந்திரீக பூஜை செய்ததாக கார்த்திகேயன்(32), இவரது மனைவி தீபிகா (28) என்ற நசீமா, கார்த்திகேயனின் நண்பர் வினோத்குமார், கார் டிரைவர் சதீஷ், சடலத்தை தோண்டி எடுத்து விற்ற சென்னையை சேர்ந்த மயான ஊழியர்கள் தன்ராஜ், கார்த்திக் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கார்த்திகேயன் வீட்டில் தடை செய்யப்பட்ட கடல் குதிரைகளை பதுக்கி வைத்திருந்ததால் வனத்துறையினர் தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று மந்திரவாதி கார்த்திகேயன், நசீமா ஆகியோர் 15 நாள் நீதிமன்றக் காவல் முடிந்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால் நசீமா மட்டுமே திருச்சி சிறையிலிருந்து பெரம்பலூர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

கார்த்திகேயன் உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை. இதனால் வீடியோ கான்பரன்ஸ் முறையில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வரை கார்த்திகேயனின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார்.

அதேபோல் நசீமாவின் காவலும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

.

மூலக்கதை