மாநகர பஸ் மோதி வாலிபர் சாவு - கேகே.நகரில் பரிதாபம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாநகர பஸ் மோதி வாலிபர் சாவு  கேகே.நகரில் பரிதாபம்

சென்னை- அருப்புகோட்டையை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகன் சுரேஷ்(29).

இவர் சென்னை கே. கே. நகரில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இன்று காலை அலுவலகத்திற்கு பைக்கில் சென்றார்.

பி. டி. ராஜன் சாலையில் செல்லும் போது எதிரே வள்ளலார் நகரில் இருந்து கே. கே. நகர் நோக்கி சென்ற 37டி மாநகர பஸ், அவரது பைக் மீது மோதியது. இதில் சுரேஷ் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை