வழக்கை திரும்பப்பெற கோரி ஆந்திரா போலீஸ் மிரட்டுவதாக புகார்

தினகரன்  தினகரன்

ஆரணி : 2015-ல் 20 தமிழர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர போலீஸ் மீது வழக்கு தொடர்ந்தவருக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. வழக்கை திரும்ப பெறக்கோரி ஆந்திரா போலீஸ் தொடர்ந்து மிரட்டுவதாக முனியம்மாள் என்பவர் குற்றசாட்டியுள்ளார்.  சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களில் ஆரணியை சேர்ந்த முனியம்மாளின் கணவர் சசிகுமாரும் அடக்கம். இதனை தொடர்ந்து ஆந்திரா போலீஸ் மீது முனியம்மாள் வழக்கு தொடர்ந்தார், இந்த வழக்கை திரும்பக்கோரி ஆந்திரா போலீசாருடன், தமிழக காவல்துறையும் மிரட்டுவதாக முனியம்மாள் குற்றசாட்டியுள்ளார்.

மூலக்கதை