தமிழ் முரசு செய்தி எதிரொலி - பஸ் ஸ்டாப் மேற்கூரை சீரமைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தமிழ் முரசு செய்தி எதிரொலி  பஸ் ஸ்டாப் மேற்கூரை சீரமைப்பு

ஆவடி- தமிழ் முரசு செய்தி எதிரொலியாக பஸ் ஸ்டாப் மேற்கூரை சீரமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆவடியை அடுத்த பட்டாபிராம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தண்டுரை பஸ் ஸ்டாப், வர்தா புயலில் சேதம் அடைந்தனர். மேற்கூரை அடியோடு காற்றில் பறந்து சென்றது.

இதனால் மழை, வெயிலில் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். உட்கார சீட்கூட இல்லாமல் கால்கடுக்க நின்று அவதிப்பட்டு வந்தனர்.

பஸ் ஸ்டாப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து தமிழ் முரசு நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து தண்டுரை குளம் பஸ் ஸ்டாப்பை கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடி நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, பஸ் ஸ்டாப் மேற்கூரையை நகராட்சி ஊழியர்கள் சீரமைத்தனர்.


.

மூலக்கதை