அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஆவடி- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கக்கோரியும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் அம்பத்தூர் நகர அதிமுக சார்பில், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் என். அய்யனார் தலைமை தாங்கினார்.

200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு, ஓபிஎஸ்ஸை ஆதரித்து கோஷங்கள் எழுப்பினர். எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோஷங்கள் போட்டனர்.

தொகுதி எம்எல்ஏ அலெக்சாண்டரை காணவில்லை என்று அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தினால் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் மைக்கேல்ராஜ், நகர அவைத்தலைவர் கிருஷ்ணன், நிர்வாகிகள் டாக்டர் கோதண்டம், அரிகிருஷ்ணன், பாலசுந்தரம், மோகன், காலனி பாலா, சகாதேவன், வட்ட செயலாளர்கள் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை