ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்திற்கு அஸ்வின் ஆதரவு

தினகரன்  தினகரன்

சென்னை: ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் அமைதியான வழியில் போராட்டம் நடந்து வருவது பாராட்டத்தக்கது என்று கூறினார்.  மேலும் அறவழியில் அமைதியாக போராடி நமது உரிமையை மீட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை