முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை
அலங்காநல்லூர்: முதலமைச்சரே வந்தாலும் அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் ஜல்லிக்கட்டு நடத்தும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். நிரந்தர அனுமதி கிடைத்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அலங்காநல்லூர் மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் அறிவிப்பால் நாளை ஜல்லிக்கட்டு நடக்குமா, இல்லையா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.