டாஸ்மாக் கடை, பார் மீது மாணவர்கள் தாக்குதல் - குடிமகன்கள் ஓட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டாஸ்மாக் கடை, பார் மீது மாணவர்கள் தாக்குதல்  குடிமகன்கள் ஓட்டம்

திருச்சி - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியில் 4வது நாளாக போராட்டம் இன்றும் நடக்கிறது. 3வது நாளான நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே பைக் ஊர்வலமாக சென்ற கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தமிழ்நாடு ஓட்டல் எதிரே திறந்திருந்த டாஸ்மாக் கடையை கண்டனர்.

பின்னர் மாணவர்கள் திடீரென சாலையின் நடுவே பைக்குகளை நிறுத்திவிட்டு, டாஸ்மாக் கடையை இழுத்து மூடும்படி கூறினர். சில மாணவர்கள் சாலையிலிருந்த கற்களை தூக்கி வீசினர்.

இதில் கடையில் இருந்த டியூப் லைட் உடைந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர்.

அருகிலிருந்த பார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு மது குடித்துக்கொண்டிருந்தவர்களும் அலறியடித்து ஓடினர்.

கடையை இழுத்து மூடிவிட்டு மாணவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். மாணவர்கள் சென்ற பின் கடை ஊழியர்கள் கடையை திறந்து வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை