கூடுவாஞ்சேரியில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு இறுதி சடங்கு செய்து போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூடுவாஞ்சேரியில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு இறுதி சடங்கு செய்து போராட்டம்

கூடுவாஞ்சேரி - சென்னை அருகே கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர், டிடிசிநகர், மாடம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி நடத்தினர். இதற்கு குன்றத்தூர் ஒன்றிய திமுக மகளிரணி செயலாளரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான மலர்விழி தமிழ்அமுதன், இஞைரணி செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊரப்பாக்கம்-காரணைப்புதுச்சேரி கூட்ரோடு, வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள கொளப்பாக்கம் பகுதியில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு பாடை கட்டி, மாலை போட்டு, ஒப்பாரி வைத்தனர்.

பின்னர் தேங்காய் உடைத்து ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

.

மூலக்கதை