உத்திரமேரூரில் நாளை காஞ்சி. தமாகா பொதுக்கூட்டம் - ஜி.கே.வாசன் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்திரமேரூரில் நாளை காஞ்சி. தமாகா பொதுக்கூட்டம்  ஜி.கே.வாசன் பங்கேற்பு


காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா தலைவர் மலையூர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தமாகா சார்பில் நாளை (22ம்தேதி) காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாபெரும் பொதுக்கூட்டம் என் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில், தமாகா தலைவர் ஜி. கே. வாசன், துணை தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
எனவே மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக், மாநில பொதுச்செயலாளர் சங்கர், வட்டார தலைவர்கள் டி. கே. கஜா, ஜெயக்குமார், சீனிவாசன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கூறியுள்ளார்.


.

மூலக்கதை