அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி திமுக எம்.பி மறியல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி திமுக எம்.பி மறியல்

திருச்சி - திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்பி தலைமையில் 7 திமுகவினர் ஜங்ஷன் வந்தனர். அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் வந்ததும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

பின்னர் கீழே இறங்கிய அவர்கள், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தண்டவாளத்தில் கடலூர்- திருச்சி பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.

.

மூலக்கதை