ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமாகா சார்பில் மனித சங்கிலி போராட்டம் - ஜி.கே.வாசன் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமாகா சார்பில் மனித சங்கிலி போராட்டம்  ஜி.கே.வாசன் பங்கேற்பு

சென்னை - ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த வலியுறுத்தி தமாகா சார்பில் மனித சங்கிலி போராட்டம் தி. நகரில் இன்று காலை நடைபெற்றது. கட்சி தலைவர் ஜி. கே. வாசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டம் காமராஜர் நினைவிடத்தில் தொடங்கி ஜி. என். செட்டி ரோடு வரை மனித சங்கிலியாக கட்சியினர் நின்றனர்.

அப்போது ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில், மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், அசன் அலி, கத்திப்பாரா ஜெனார்த்தனன், விடியல் சேகர், கலைப்பிரிவு மாநில தலைவர் ஜெ. எஸ். கே. சதீஷ்குமார், யுவராஜா, சுனில்ராஜா, தலைமை நிலைய செயலாளர்கள் ஜி. ஆர். வெங்கடேஷ், டி. எம். பிரபாகர், ஆர். சீனிவாசன், அசோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், சி. பிஜூ, பாடி ஆர். சுந்தரம், சத்தியநாராயணன், மணிகண்டன், எம். ஆர். எஸ். மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
அப்போது ஜி. கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதோடு, சட்டமன்றத்தை கூட்டி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

இதுவே தமிழக மக்களின் உடனடி எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை