அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தள்ளிவைப்பு; அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்...
சென்னை,
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் இன்று இரவு 10 மணிக்கு மேல் அல்லது நாளை நடைபெறலாம் என அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் தகவல் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பொன்னையன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் இன்று இரவு 10 மணிக்கு மேல் அல்லது நாளை நடைபெறலாம் என்று கூறியுள்ளார்.